Friday, January 15, 2016

நேதாஜியுடன் செயல்பட்ட சுதந்திர போராட்ட தியாகி அமீர் ஹம்சா காலமானார்


சென்னை: பெரும் வர்த்தக குடும்பத்தில் பிறந்த  தமிழர் அமீர் ஹம்சா ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களை இந்திய தாய் நாட்டை விட்டு விரட்ட தனது 21 வயதில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். அக்காலத்தில் லட்சக்கணக்கில் நேதாஜிக்கு நன்கொடை வழங்கியுள்ளார் இவர் தனது இறுதி காலத்தில் கடும் வறுமையில் வாடினார். இவர் சென்னையில் காலமானார். இவரது தந்தையார் பர்மாவில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். நேதாஜியின் மீது மிகுந்த அன்பு கொண்டவராக விளங்கியவர் அமீர் ஹம்சா.1943ல் பர்மாவிற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சென்ற போது ரங்கூனில் நடைபெற்ற விழாவில் தனக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளை ஏலம் விட்டார். அப்போது அம்மாலைகளில் ஒன்றை மூன்று லட்சம் ரூபாக்கு ஏலத்தில் எடுத்தவர் அமீர் ஹம்சா.

ஒருமுறை இந்திய தேசிய ராணுவத்தில் அமீர் ஹம்சா பணியாற்றியதைப் பாசத்தின் காரணமாக அவரது தந்தை விரும்பவில்லை. இரண்டு நாள் அவரை வீட்டில் பூட்டிவைத்துவிட்டார். இதனை அறிந்த நேதாஜி அமீரையும் அவரது தந்தையையும் அழைத்து வரச்செய்தார். நாடு சுதந்திரம் அடைய வேண்டிய அவசியத்தை உணர்ச்சிப் பொங்க எடுத்துரைத்தார். நேதாஜியின் உரையாடலைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்ட இவரது தந்தையார், தனது சட்டைப் பையிலிருந்த காசோலைப் புத்தகத்தை எடுத்து இரண்டு லட்சத்து முப்பதாயிரத்துக்கான ஒரு காசோலையை எழுதி நேதாஜியிடம் கொடுத்ததோடு தன் மகனையும் முழுமையாக நேதாஜியிடம் ஒப்படைத்தார். 

இவரும் இவரது தந்தையாரும் நேதாஜியின் இந்திய இராணுவத்திற்காக பல லட்சக்கணக்கான ரூபாய்களை வாரி வழங்கினார்கள். இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியதற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இது தொடர்பான வழக்கு லண்டன் பிரிவி கவுன்சில் வரை சென்றது. காந்திஜி உள்ளிட்டவர்கள் இவரது விடுதலைக்காக வாதாடியதின் காரணமாக மரண தண்டனையிலிருந்து தப்பினார்.

எண்ணிலடங்கா இஸ்லாமிய தியாகிகள்



கடந்த சில வாரங்களாக இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக தங்களின் உடல் ,  பொருள்,  ஆவியை தியாகம் செய்த பல இஸ்லாமியப் பெருமகன்களின் வரலாற்றை  சுருக்மாக கண்டு வருகிறோம். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சிறைக்கு சென்றவர்களிலும் உயிர்களை தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அவர்களின் மக்கள் தொகையின் விகிதாச்சாரத்தோடு ஒப்பிடும்போது மிக அதிகமாகவே இருந்தார்கள் என்று பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் இல்லஸ்ட்ரேடட் வீக்லி பத்திரிகையில் எழுதி அது 20/12/1975 அன்று வெளிவந்தது. 

ஆனால் மறு புறத்தில் முஸ்லிம்கள் செய்த தியாகங்களை குறைத்து மதிப்பிடுகிற ஒரு கூட்டம் அளவற்ற பொய்களை அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறது. முஸ்லிம்களை  ஏதோ ஒரு வேண்டாத தலைச்சுமை போல ஆட்சியாளர்களும் அவர்களின் அடிவருடிகளும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் இந்த நாட்டை விட்டு          அப்புறப்படுத்தவேண்டுமென்றும் அள்ளிவிட்டுக் கொண்டிருக்கொண்டிருக்கிறார்கள். அரசியல் சட்டத்துக்கு விரோதமான அவர்களின்  இந்த  க் கருத்துக்கள், சட்டபூர்வமான நடவடிக்கைகளை அவ்விதம் பேசுவோர் மீது ஏவி விடப்பட்டாலும்,அவை யாவுமே    கண் துடைக்கும் காரியங்கள்தான்.  

அந்நியனுக்கு அடிமைச் சேவகம் செய்தவர்கள் எல்லாம் இன்று ஆட்சிக் கட்டிலும், அதிகார இடங்களிலும் அமர்ந்து கொண்டு சுதந்திரத்திற்கு தங்கள் எதிர்கால சந்ததியினரின் நலன்களை அர்ப்பணித்த சமுதாயத்தை அடக்கியாள்கின்ற அவலம் ஒருபுறம் ; சுதந்திரத்துக்காக வாளேந்திய சமுதாயம் வாழ்வுரிமை கேட்டு வீதியில் நிற்கும் அவலம் மறுபுறம்.

கிழக்கிந்திய கம்பெனிக்கு அவர்களின் பிரதிநிதிகளாக இருந்தூ கிஸ்தி வசூ¬லித்து தந்தவர்கள் எல்லாம் , இன்று தியாக வேஷம் போட்டு முஸ்லிம்களின் தியாகத்தின்  சூரியனின் கதிர்களை ,  கரங் கொண்டு மறைத்து விடலாம் என்று நினைக்கலாம், ஆனால் ஆயிரம் கரம் கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. இந்திய மண்ணின் கடைசி இஸ்லாமியர் இருக்கும் வரை இந்தியாவின் விடுதலைக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய அரும்பணிகள் மறையாது. எவ்வளவு காவிச்சாயம் அடித்தாலும் இந்த தியாகங்களை மறைக்க முடியாது.

சிறு குறிப்புகளுடன் இந்தப் பட்டியல் நீளும். 

வேலூர் சிப்பாய்க் கலகம்:-

ஒரு சுதந்திரத்துக்கான முதல்  போராட்டம என்று வர்நிக்கப்படும் சிப்பாய் புரட்சியைக்  கூட முஸ்லிம்கள் தொடர்புடையதால்  செய்தால் கலகம் என்று வரலாற்றுப் புரட்டு செய்கிறார்கள். இந்தப் பாவிகள் .  1857 சிப்பாய்க் கலகப் புரட்சிக்கு வித்திட்ட மௌலவி அஹமது ஷாவின் தலைமையில் போராடிய சிப்பாய்களை பீரங்கி வாயில் வைத்து பிளந்து, அகழியில் வீசினார்கள்.  இந்த உயிர்த் தியாகங்களைக் கூட  மறந்துவிட்டு வரலாற்றுப் பாடங்களில் இரண்டு மார்க் கேள்விக்கு பதிலாகவே  இந்த சம்பவம் சித்தரிக்கப் படுகிறது.

மாப்பிள்ளைமார்கள் போராட்டம்:

1921ல் வெள்ளையனுக்கு எதிராக கிலாபத் இயக்கம் கண்ட 100க்கும் அதிகமான மாப்பிளாமார்கள் கேரளாவின் திரலிருந்து ஏற்றி கோயம்புத்தூருக்கு ஒரு கூட்ஸ் வண்டியில் அடைக்கப்பட்டு அனுப்பி, நசுக்கிக் கொல்லப்பட்டார்களே! இந்த மாப்பிள்ளைமார் மணவறையில் அனுபவிக்காமல் , பிணமாகி  அடக்கப் பட்ட மண்ணறைகள் இன்றும் கோவை ரயில் நிலையில் அருகில் அமைதியாக சான்று பகர்கிறதே! இந்த வரலாற்று தியாகத்தை  எப்படி மறக்க முடியும்? மறைக்க முடியும்?

காந்திஜியின் பட்டங்கள், பதவிகள் புறக்கணிப்பு போராட்டம்:-

அன்றைய வெள்ளையன் ஆட்சியில் 13% இடஒதுக்கீட்டில் இருந்த முஸ்லிம் சமுதாயம் காந்திஜியின் பட்டங்கள், பதவிகள் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. கான் சாஹிபிலிருந்து, காயிதே மில்லத் வரை 90% அதிகமானோர் தங்கள் பட்டங்கள் பதவிகளைத் துறந்தனர். அன்று பட்டங்கள் பதவிகளைத் துறக்காமல் இருந்திருந்தால், இன்று, இடஒதுக்கீடு கேட்டுப் போராடும் அவல நிலை இருந்திருக்காதே ! அரசுபபதவி அதிகாரங்களில் முஸ்லிம்களின் சதவீதம் குறைந்ததற்கு இதுவும் ஒரு வலுவான காரணமல்லவா? முஸ்லிம்களை உசுப்பேத்திவிட்டு விட்டு மற்றவர்களுக்குப் பதவிகளைப் பெற்றுத்தந்த ஒரு அரசியல் அசித்க்கு ஆளானவர்கள்தானே முஸ்லிம்கள்?

இந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் பங்கு

இந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்திய விடுதலைப் போரில் தங்கள் வழிபாட்டுத் தலங்களைக் கூட வெள்ளையனுக்கு எதிராகப் பயன்படுத்திய ஒரு சமுதாயம் உண்டென்றால், அது இஸ்லாமிய சமுதாயம்தான்.

வெள்ளிக் கிழமை ஜூம்மா மேடைகள் எல்லாம் வெள்ளையனுக்கு எதிராக போர்ப் பரணி பாடின. ஜூம்மா மேடைகளில் உரமேற்றியதன் விளைவு வீரத்துடன் இந்த சமுதாயம் வெள்ளையனை எதிர்த்துப் போராடியது. வெள்ளையனின் உடை கலாச்சாரம், மொழி போன்றவை ஹராம் என பத்வாக்கள் அளித்தனர். வெள்ளையனின் அதிகார வரம்புக்கு உட்பட்ட நிலப்பரப்புகள் யுத்த பூமி  என்பது போன்ற பத்வாக்கள் வழங்கப்பட்டன.

19 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய இஸ்லாமிய அறிஞராகத் திகழ்ந்த மௌலவி காசிம் அஹ்மத் நாளோத்வி 1885ல் இந்திய தேசிய காங்கிரஸில் முஸ்லிம் உறுப்பினராகச் சேர வேண்டும் என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். வெள்ளையனை நாட்டை விட்டு விரட்டுவது மார்க்கக் கடமை என்ற அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட பத்வாக்களை (மார்க்கத் தீர்ப்புக்களை) திரட்டி நுஸ்ரத்தூல் அஹ்ரார் (விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான உதவி) என்ற பெயரில் நூல் ஒன்றையும் வெளியிட்டார்.

காந்திஜி அழைப்பு விடுத்த கள்ளுக்கடை போராட்டத்திற்கு மதுரையில் கைதான 19 பேரில் 10 முஸ்லிம்கள் . இட ஒதுக்கீட்டில் பதிமூன்று சதவீதமே பெற்றிருந்த முஸ்லிம்கள் தியாகம் செய்வதில் – சுதந்திரத்துக்காகப் போராடுவதில் – துன்பங்களைத் தாங்கிக் கொள்வதில்  50 சதவிகிதத்திற்கு அதிகமாகப் பங்கு கொண்டிருந்தனர்  என்பது  குறிப்பிடத்தக்கது.

காந்திஜி நடத்திய அஹிம்சைப் போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் பட்டியலில் ஒரு பகுதி:

1. காதிர் முஹைத்தீன் மரைக்காயர் (பர்மா, கிலாபாத், ஒத்துழையாமை)

2. மி.இ. முஹம்மது அப்துல் காதர் சாஹிபு ி தென்காசி (கிலாபத், அந்நியத் துணி எரிப்பு, ஒத்துழையாமை இயக்கம்)

3. அப்துல் ஹமீதுகான் 1932ல் சென்னை மேயராக பணியாற்றியவர் (சுதந்திரப் போராட்டத்திற்காக சென்னை சட்டசபையில் குரல் கொடுத்தார்.)

4.முகமதலி சேலம் (கள்ளுக்கடை மறியல்)

5. பி.என். அப்துல் கபீர் தாராபுரம் (வில்லுப்பாட்டு மூலம் தேசப் பற்றை 
வளர்த்தார், கிலாபத்திலும் கலந்து கொண்டார்)

6. பண்டிட் அப்துல் மஜீத் பளைக்குளம் (கிலாபத்)

7. கலிபுல்லாஹ் திருச்சி (கிலாபத்)

8. நூர்மல் சென்னை (பகத்சிங் படத்தை அடையில் வைத்து விற்றதாக கைது செய்யப்பட்டு, 18-1 அச்சு சட்டப்படி வழக்குத் தொடரப்பட்டது.)

9. அப்துல் ஹமீது

10. மௌலானா அப்துல் காதர்

1973 ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதில் நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸலி¬ம்களின் பெயர்கள் இடம் பெற்று  இருந்தன. 

அவர்களின் விபரம் வருமாறு:

பள்ளப்பட்டி மனிமொழி மவ்லானா
இராஜகிரி அப்துல்லா
இளையான்குடி கரீம் கனி
திருப்பத்தூர் அபூபக்கர்
திருப்பத்தூர் தாஜிதீன்
அத்தியூத்து அபூபக்கர்
பக்கரி பாளையம் அனுமன் கான்
சென்னை அமீர் ஹம்சா
சென்னை ஹமீது
செங்குன்றம் கனி
வண்ணாரப்பேட்டை ஹயாத்கான்
புதுவலசை இபுராஹிம்
பார்த்திபனூர் இபுராஹிம்
வனரங்குடி இபுராஹிம்
இளையான்குடி அப்துல் கபூர்
மேலூர் அப்துல் ஹமீது
சோழசக்கர நல்லூரி அப்துல் ஜப்பார்
தத்தனனூர் அப்துல் காதர்
பட்டுக்கோட்டை அப்துல் காதர்
திருப்பூர் அப்துர் ரஜாக்
காரிவிப்பட்டினம் அப்துல் மஜித்
குருவம் பள்ளி அப்துல் மஜீத்
கண்ணாத்தாள் பட்டி அப்துல் முத்தலிபு
லெப்பைக் குடிகாடு அப்துல் சலாம்
ராம்நாடு அப்துல் வஹாப்
மானாமதுரை அப்துல் பாசித்
திரிவிடைச் சேரி அப்துல் வஹிப்
அத்தியூத்து இபுராஹிம்
சென்னை ஜாபர் ஹக்கிமி
சிங்கம் மங்களம் ஜெய்னுல் ஆபிதீன்
திருப்பத்தூர் காதர் பாட்ஷா
புதுவலசை முஹம்மது லால் கான்
பார்த்திபனூர் கச்சி மைதீன்
தஞ்சை முஹம்மது தாவூது
அறந்தாங்கி முஹம்மதுசெரிபு
திருச்சி வரகனேரி முஹம்மது சுல்தான்
வடபழனி சென்னை முஹம்மது யூசுப்
தூத்துக்குடி முஹம்மது கல்லுரிஜனி
சிவகங்கை முஹம்மது இபுராஹிம்
சென்னை முஹம்மது உமர்
மதுரை மொய்தீன் பிச்சை
அம்மன்சத்திரம் முஹம்மது மீராசா
திருப்பத்தூர் பீர் முஹம்மது
கும்பகோணம் ரஹ்மத்துல்லா
குடியத்தம் நஜீமுல்லாஹ்
கிருஷ்ணகிரி தாவூத் ஷாயிபு
இராமநாதபுரம் சையது கனி
பரங்கிப் பேட்டை  தாஜிதீன்
மன்னர்குடி சிக்கந்தர்
கம்பம் சிக்கந்தர்
முதுகுளத்தூர் சுல்தான்
கும்பகோணம் சுல்தான்
இராமநாதபுரம் தாஜிதீன்

இந்திய சுதந்திரத்துக்கான விடுதலைப் போரில் இவ்வளவு முஸ்லிம்களும் தங்களுடைய  தியாகத்தால் இந்திய சுதந்திரப் போராட்டத்தை வடிவமைத்தார்கள். தங்களின் இரத்தத்தை சிந்தினார்கள். இன்னுயிர் ஈந்தார்கள். கண்ணீர் சிந்தினார்கள். தியாகத் தழும்புகளை ஏற்றார்கள். 


இபுராஹீம் அன்சாரி

சுதந்திர போராட்ட வீரர் தியாகி ஜனாப்.M.K.M.அமீர் ஹம்சா

காலப்பெட்டகம்
சுதந்திர போராட்ட வீரர் ஹம்சா
(அல்ஹாஜ். என். அன்பு பகுருதீன்)
சுதந்திர போராட்ட ஹீரோக்களில் இவரும் ஒருவர். தேசப்பற்று அவரது ரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது. நாட்டின் மீது அளவு கடந்த காதல் அவருக்கு. எண்பத்தி நான்கு வயதில் அபார நினைவாற்றலுடன் இருக்கிறார். இந்திய தேசியப் படையில் (ஐஎன்ஏ) நேதாஜியுடன் இருந்த காலங்கள், மகாத்மா காந்தியின் பரிந்துரையால் மரணப் பிடியிலிருந்து மீண்டது, மதக் கலவரத்தில் தந்தையைப் பரி கொடுத்தது என எல்லாவற்றையும் அடுக்கடுக்காக சொல்கிறார்.
அமீர் ஹம்சா அவரது பெயர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடுத்த வால்டாக்ஸ் சாலையில் உள்ளது அவரது வீடு. விதவை மகளுடனும், வறுமையுடனும் வசித்து வந்தார். பூர்வீகம் இராமநாதபுரத்தில் உள்ள அபிராமம் கிராமம். தாத்தா காலத்திலேயே பர்மாவுக்கு சென்று ரங்கூனில் தங்கம், வைரம், வெள்ளி தான் வியாபாரம்.
இளம் வயதிலேயே நேதாஜியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டார். பிறகு ஐ.என்.ஏ.வில் சேர்ந்த அவர் நாட்டின் விடுதலையைத் தமது லட்சியமாக்கிக் கொண்டார். ஐ.என்.ஏ.வில் சேர்ந்ததும் ரூ. 3 லட்சத்தை நன்கொடையாக நேதாஜியிடம் வழங்கினார். அதை ஏற்க மறுத்த நேதாஜி, ஹம்சாவின் தந்தையிடம் பணத்தை வாங்குவதற்கான அனுமதியை கேட்டார். அவரது தந்தை சம்மதம் தெரிவித்த பிறகே அப்பணத்தை வாங்கினார் நேதாஜி.
நேதாஜி மறைந்து போனது வரை அவருடனே இருந்தவரென்பதால் நேதாஜி பற்றி எவ்வளவு பேசினாலும் அவருக்குச் சலிப்பு ஏற்படுவதில்லை. சிறை அனுபவம் மட்டுமல்ல, தூக்கு மேடை வரை சென்று திரும்பியவர் அவர் !
நேதாஜி மறைந்த பிறகு 1945 ஏப்ரல் மாதத்தில் 26 –ம் தேதி நகைக் கடையில் உட்கார்ந்திருந்த அவரை கர்னல் ரென்னித் தலைமையிலான பிரிட்டிஷ் ராணுவம் கைது செய்தது. கடையில் இருந்த நகையையெல்லாம் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்கள். பிரிட்டிஷ் ராணுவ நீதிமன்றம் அவருக்கு தூக்குத் தண்டனையை அறிவித்தது. அவருடன் 33 பேரும் தூக்கு மேடை ஏற இருந்தார்கள். அப்போது மகாத்மா காந்திக்கு தகவல் போய், உடனே அவரது தலைமையில் ஜவஹர்லால் நேரு, முகம்மது அலி ஜின்னா, வல்லபாய் படேல் உள்ளிட்டவர்கள் பிரிட்டிஷ் ராணுவ நீதிமன்றத்தில் அவர்களுக்காக வாதாடினார்கள். இதனால் உடனே மரண தண்டனையை ரத்து செய்தார்கள்.
1947 –ல் நாடே சுதந்திரம் பெற்ற சந்தோஷத்தில் மூழ்கி இருந்தது. அச்சுதந்திரத்துக்கு காரணமானவர்களில் ஒருவரான ஹம்சாவால் வெகு நாட்கள் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. அப்போது அவர் திரும்ப ராமநாதபுரத்துக்கே வந்து விட்டார். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை ஆகி நாடு முழுக்க வன்முறை.
இவ்வன்முறைத் தீ ராமநாதபுரத்தையும் விட்டுவைக்கவில்லை. மேலக்கொடுமலூரில் இருந்தபோது வன்முறை ஏற்படக்கூடாதென்று ஹம்சாவும் அவரது தகப்பனாரும் பல முயற்சிகள் எடுத்தனர். வன்முறையில் யாரும் ஈடுபடக் கூடாதென்று சமாதானம் பேசினர். யாரும் கேட்க வில்லை. அவரது தகப்பனாரை வேல் கம்பியால் நெஞ்சில் குத்திவிட்டார்கள். ஹம்சாவை இரண்டு பேர் இழுத்துட்டுப் போய் ஒரு வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டார்கள். வன்முறை கூடாதென்று கடைசிவரை பேசிய ஹம்சாவின் தகப்பனாரை கொன்று விட்டனர்.
மதக்கலவரங்களுக்குப் பிள்ளையார் சுழி போட்ட இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை, தடுக்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று என்பது அவரது கருத்தாகும். உங்க தலைமையில் நாடு விடுதலை அடைஞ்சா பிரிவினைக் கொள்கையை கைவிடுவேன்னு நேதாஜியிடம் ஜின்னா சொல்லியிருந்தார். நேதாஜி இருந்திருந்தால் இந்தியா – பாகிஸ்தான் பிரிஞ்சிருக்காது என ஆதங்கத்துடன் வாழ்ந்து மறைந்தார் அமீர் ஹம்சா.

நன்றி :
முகவை முரசு
மார்ச் 11-17, 2011